ஈராக்கில் அமெரிக்க வீரர்களைக் குறிவைத்து மீண்டும் ராக்கெட் தாக்குதல் 

0 1493

ஈராக்கில் அமெரிக்க வீரர்களைக் குறிவைத்து மீண்டும் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா குண்டு வீசிக் கொன்றது. இதையடுத்து ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்தது. இந்நிலையில் ஈராக்கில் நிலைகொண்டிருந்த அமெரிக்கப் படைகள் மீது ஈரான் இருமுறை ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இதில் உயிரிழப்பு குறித்த விபரங்கள் முன்னுக்குப் பின் முரணாக உள்ள நிலையில் நேற்றிரவிலும் அமெரிக்கப் படைகளைக் குறிவைத்து ராக்கெட் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. தொலைதூர மாகாணமான கிர்குக்கில் அமைந்துள்ள அமெரிக்கப் படைத்தளத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் யாருக்கும் காயமில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments